விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?
தெரியவில்லை...,
இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!
என் மனம் ஒரு
வெண் சங்கு!!
சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.
அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?
மழை..
-1-
அழைப்பின்றி வரும்
தீயணைப்புப்படை!!
-2-
காற்று மண்டலத்தின்
தூசு தட்டும்
ஈரத் துடைப்பான்!!
கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?
முகமலர்ச்சி..
மனமகிழ்ச்சியின்
நேரடி ஒளிபரப்பு!!
வேண்டும்..
ஆசைகளை உறங்க வைக்க
ஒரு தாலாட்டு!!
பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!
குழந்தைகள்..
ஒரே தேவனின்
பல பிரதிபலிப்பு!!
மரணம்..
வாழ்க்கை வைத்த
முற்றுப் புள்ளி!!
ஏழை..
பணத்தால்
கைவிடப்பட்டவன்!!
காளான்..
மழைக்குப் பின்
ஏன்னிந்தக் குடை?
கவிதை..
கருவைச் சுமக்கும்
தாய்மை!!
ஓவியம்..
தூரிகையின் பயணத்தால்
உருவான புண்ணியஸ்தலம்!!
போர்வை..
மூடிப் படுக்கும் போது
எனை மூழ்கடிக்கும்
சிந்தனைக் குடில்!!
மௌவல்..
மழலையின் சிரிப்பில்
அம்பலமான ரகசியம்!!
வண்ணத்துபூச்சி..
-1-
வண்ணங்களுக்கு என்று
சிறகு முளைத்தது?
-2-
நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!
-1-
இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!
-2-
உன் பாதம் நனைத்த
மழைத்துளியிடம் தோற்ற..,
குடையாகத்தான்
நான் உன்னிடம்!!
-3-
நிராகரித்தாய்...
நனைவதற்கு ஆசைப்பட்ட
குடைக்கம்பியானது
என் காதல்!!
தாமதமாய்..,
ஏற்றுக்கொள்கிறாய்...
குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்!!
-4-
குடையுடன்... காத்திருக்கிறது
ஒரு காதல்!!
மழைக்காக..
வந்து விட்டதோ
வெயில்..
பத்திரமாகவே காதல்
குடைக்கு நன்றி!!
-5-
ஒரு குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!