Friday, July 31, 2009

நீ..

விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?

தெரியவில்லை...,

இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!

Monday, July 27, 2009

....???....

சந்திப்புகளும்... பிரிவுகளும்...
எனக்குத் தருவதென்னவோ
ஒன்றைத்தான்!

அது..,
கவிதை!!


Wednesday, July 22, 2009

நீ..

என் மனம் ஒரு
வெண் சங்கு!!

சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.

அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?

உன் நினைவுகள்-3-

உன் நினைவு..
என் நனவின்
கனவு!!

Saturday, July 18, 2009

நீ..!?

தூக்கம் களவாடுபவையே..
அற்புதப் படைப்புகளாம்!!

நீயும் அப்படித்தானோ!?

Friday, July 17, 2009

நாம்..

நான் வேண்டாமெனக்கு..
இனி..,
நீயே வைத்துக்கொள்
என்னை!!

Thursday, July 16, 2009

ஏழ்மை!

அவள் கொடுத்த
வெள்ளை மோரில்..
இத்த கூரைத் தூசி!!

Wednesday, July 15, 2009

நாம்..

மணமக்களுக்கு..
பிணத்திற்கு..
இறைவனுக்கும் கூட..,

ஒரே மாலைதான்!!

நாம்தான் நம்மைக்
குழப்பிக் கொள்கிறோம்..,
மகிழ்ச்சி..
கவலை..
பணிவு..என!

எல்லாமே
நிகழ்வுகள்தான்!!

Monday, July 13, 2009

உன் நினைவுகள்-2-

கண்ணீர்...
உன்நினைவுகளின்
கரைசல்!

உதிரிப் பூக்கள்..

ழை..
-1-
ழைப்பின்றி
வரும்
தீயணைப்புப்படை!!
-2-
காற்று
மண்டலத்தின்
தூசு தட்டும்
ஈரத் துடைப்பான்!!

கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?

முகமலர்ச்சி..
மனமகிழ்ச்சியின்
நேரடி ஒளிபரப்பு!!

வேண்டும்..
ஆசைகளை உறங்க வைக்க
ஒரு தாலாட்டு!!

பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!

குழந்தைகள்..
ஒரே தேவனின்
பல பிரதிபலிப்பு!!

மரணம்..
வாழ்க்கை வைத்த
முற்றுப் புள்ளி!!

ஏழை..
பணத்தால்
கைவிடப்பட்டவன்!!

காளான்..
மழைக்குப் பின்
ஏன்னிந்தக் குடை?

கவிதை..
கருவைச் சுமக்கும்
தாய்மை!!

ஓவியம்..
தூரிகையின் பயணத்தால்
உருவான புண்ணியஸ்தலம்!!

போர்வை..
மூடிப் படுக்கும் போது
எனை மூழ்கடிக்கும்
சிந்தனைக் குடில்!!

மௌவல்..
மழலையின் சிரிப்பில்
அம்பலமான ரகசியம்!!

வண்ணத்துபூச்சி..
-1-
வண்ணங்களுக்கு என்று
சிறகு முளைத்தது?
-2-
நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!

என்ன செய்ய?

உன் வருகையைத் தின்றே
பசியாறிகொள்வேன் நான்!

புரியாமல்..,

உணவுடன் வரும் உன்னை
என்ன செய்வது??

Wednesday, July 8, 2009

என் எண்ணக்குடை விரிப்புகள்..

-1-
இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!

-2-
உன்
பாதம் நனைத்த
மழைத்துளியிடம் தோற்ற..,
குடையாகத்தான்
நான் உன்னிடம்!!

-3-
நிராகரித்தாய்
...
நனைவதற்கு ஆசைப்பட்ட
குடைக்கம்பியானது
என் காதல்!!

தாமதமாய்..,

ஏற்றுக்கொள்கிறாய்...
குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்!!

-4-
குடையுடன்
...
காத்திருக்கிறது
ஒரு காதல்!!
மழைக்காக..

வந்து விட்டதோ
வெயில்..

பத்திரமாகவே காதல்
குடைக்கு நன்றி!!

-5-
ஒரு
குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!

Saturday, July 4, 2009

நீ..

என்னால் உணர முடிகிறது
என்னுள் நீ!
உன்னால் உணர முடிகிறதா?..
உன்னுள் நீ இல்லை என்பதை!!

Friday, July 3, 2009

உன் நினைவுகள்-1-

என் தனிமை
வேளையில்..,
உன் நினைவுகளே
துணை!

காதலர் தினம்..

உலகமே கொண்டாடும்
சில தினங்களைத் தவிர்த்து..
உன்னை மட்டுமே
கொண்டாடுவேன் நான்,
தினம்.. தினம்..!!