கவிதைகள் சுமந்தே
திரிகின்றாயே...!
பாரமாகவே இல்லையா
உனக்கு?-என்றேன்.
உன் காதலையே
சுமக்கின்றேன்...
கவிதைகள் என்ன???
எனும் பதில் மொழியால்,
மீண்டும் களவாடுகிறாய்!!
முன்னமே..,
உன்னிடம் தொலைந்து போன என்னை!!
Tuesday, September 29, 2009
Thursday, September 17, 2009
சில துளிகள்...
-1-
தவிர்க்க முடியவில்லை..,
செவியின் கவனம்
குவிகிறது பக்கத்துவீட்டில்!!
"ஒலிக்கும் பிடித்த பாடல்"
-2-
தேவைக்கும் அதிகமாய்
உண்டுவிட்டாளாம்-வாந்தியெடுக்கும்
"பிச்சைக்காரி"
-3-
கூட்டணியுமில்லை..
சத்தமுமில்லை..
"ஒற்றை வளையல்"
-4-
இரசிப்பதை நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!
-5-
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"
-6-
பாட்டியின் ஆசைமுத்தம்
இனிக்கவில்லை பேரனுக்கு
"கன்னத்தில் வெற்றிலைக்கறை"
Friday, September 11, 2009
...??...
என் மனம்..,
என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!
உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!
Monday, September 7, 2009
உன் நினைவுகள்-4-
அழுத்தும் உன்நினைவுகளை
இறக்கிவைக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது..,
எனக்கு மீண்டும்
உயிர்த்தெழத் தெரியாதென்பது!!
இறக்கிவைக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது..,
எனக்கு மீண்டும்
உயிர்த்தெழத் தெரியாதென்பது!!
Tuesday, September 1, 2009
Subscribe to:
Posts (Atom)