Tuesday, September 29, 2009

கேள்வியும்..பதிலும்..!!

கவிதைகள் சுமந்தே
திரிகின்றாயே...!
பாரமாகவே இல்லையா
உனக்கு?-என்றேன்.

உன் காதலையே
சுமக்கின்றேன்...
கவிதைகள் என்ன???
எனும் பதில் மொழியால்,
மீண்டும் களவாடுகிறாய்!!

முன்னமே..,
உன்னிடம் தொலைந்து போன என்னை!!

Thursday, September 17, 2009

சில துளிகள்...

-1-
தவிர்க்க முடியவில்லை..,
செவியின் கவனம்
குவிகிறது பக்கத்துவீட்டில்!!
"ஒலிக்கும் பிடித்த பாடல்"

-2-
தேவைக்கும்
அதிகமாய்
உண்டுவிட்டாளாம்-வாந்தியெடுக்கும்
"பிச்சைக்காரி"

-3-
கூட்டணியுமில்லை..
சத்தமுமில்லை..
"ஒற்றை வளையல்"

-4-
இரசிப்பதை
நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!

-5-
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"

-6-
பாட்டியின் ஆசைமுத்தம்
இனிக்கவில்லை பேரனுக்கு
"கன்னத்தில் வெற்றிலைக்கறை"

Friday, September 11, 2009

...??...

என் மனம்..,

என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!

உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!

Monday, September 7, 2009

உன் நினைவுகள்-4-

அழுத்தும் உன்நினைவுகளை
இறக்கிவைக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது..,
எனக்கு மீண்டும்
உயிர்த்தெழத் தெரியாதென்பது!!

Tuesday, September 1, 2009

...நீ...

என்னுள் நிறைந்து
என் விழிகளில்
வழிகிறாய் நீ...!!