Monday, November 24, 2014

நீ சார்ந்தவைகள்

-0-
உனக்கு வாழ்த்தனுப்பித் துவங்கும் போது 
உண்மையாகவே துவங்குகிறது
அந்த நிமிடம்
நாள்
வருடம் 

-0-
துளியும் இனி
நீ வேணாம் 
போதுமெனக்கு என்றொரு முடிவில்
இப்படியாக எழுதித்
தோற்றேன்  

நீ போதும் எனக்கு.

-0-
எப்போதாவது நேரிடவே செய்கிறது
மனம் தேடும் நிழல்
உன் சாளரத்தில் கிடைக்கும் நிஜம்.

-0-
என்னை முழுவதாய் உள்வாங்கிக் கொள்ளும்
நீளப் போர்வை
உன்னை நினைவுபடுத்தாத
வெது வெதுப்பைக் கொடுத்தால்
நலமாகும் இந்த இரவு.

-0-
கனவுகள் பெருஞ்சுமை
நீ என் கனவானதென்ன

-0-
குளிர் நீரோடையடி நீ.
சலசலக்கிறாய் 

Friday, November 7, 2014

..

ஒரு சிறகு 
ஒரு கூடு 
ஒரு வெளி

இழந்தது அறியாமல் 

அலைந்து வரும் 
ஒற்றை இறகுக்கு  

குழந்தையின் கையில் 
சேர்ந்தபோது 

ஒரு சிறகை 

ஒரு கூட்டை 
ஒரு வெளியை 
அப்பிள்ளைக்குக் கொடுத்ததும் தெரியாது.

(நன்றி :மித்திரன் சார் )