நான் நினைத்ததையே
நீயும் நினைத்து
நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்
மௌனமாய் நாம்..!!
நான் நினைத்ததையே
நீயும் நினைத்து
நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்
மௌனமாய் நாம்..!!
* *
விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..!
* *
உதறவும் முடியவில்லை
உள்வாங்கவும் முடியவில்லை
உன் நினைவுகள்..!
யாரும் திட்டாதிங்க...இன்னுமா இதுன்னு.., கஷ்டப்படாதீங்க:)
தாமதமான பதிவுக்கு மன்னியுங்கள் கவிதை(கள்) !!
a-z எழுதவில்லை அதற்கும் சேர்த்து மன்னியுங்கள்...!
அன்பிற்குரியோர் "அன்பில்லாதவர்களும் கூட"
ஆதரவானது "மனிதம் மட்டுமே"
இயல்பானது "மாற்றங்கள்"
ஈட்ட வேண்டியவற்றுள் ஒன்று "பிறரின் நம்பிக்கை"
உண்மையான பொய் "நான் ரெம்ப நல்லவ"
ஊருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"
எப்போதும் வாயில் "பிடித்த பாடலின் வரிகள்"
ஏதாவது ஒருநாள் தான் "அம்மாட்ட திட்டே வாங்காமல் கழியும்"
ஐ.................... :)"உற்சாகப் பொழுதுகளில் தானாய் உளறலில் வந்துவிடும் ஓர் எழுத்து"
ஒவ்வொருவரிடமும் "ஒரு வியக்கத்தக்க விஷயம் இருக்கும்னு நான்
நம்புறேன்"
ஓதுதல் நன்று -அதனால, "எந்த குழந்தையின் அம்மாவிடம் பேசும்போதும் கண்டிப்பா படிக்க வைங்கன்னு சொல்லும் வழக்கம் உண்டு "
ஒளவை மொழி.. "ஆறுவது சினம்"
ஃ .... "நல்ல படம்"
-1-
"பயன்படுத்துங்கள் என்னை"
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது..,
குப்பைத் தொட்டியில்
குழந்தை..!!
-2-
"விளம்பரம் செய்யாதீர்கள்"- என
விளம்பரம் செய்திருந்தார்கள்..!!
-3-
"இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்"
என்பதற்கு பதிலாக..,
சுவற்றின் வெளிப்புறத்தில்
பதிக்கப்பட்டார்களோ,கடவுளார்கள்..??
-4-
"எச்சில் துப்பாதீர்"
வெற்றிலைக்கறைகளுக்கிடையே..!!
தன் வெளியில் தானாய்ச்
சிந்திய ஒளியின் துளிகள்..,
என் வீட்டின் முன்அறையிலும்.
தவிர்த்து.. தாழிட்டு..
உள்அறையில் உறங்கச் சென்றேன்.
கனவில் நிலா..!!
-1-
தவிர்க்க முடியவில்லை..,
செவியின் கவனம்
குவிகிறது பக்கத்துவீட்டில்!!
"ஒலிக்கும் பிடித்த பாடல்"
-2-
தேவைக்கும் அதிகமாய்
உண்டுவிட்டாளாம்-வாந்தியெடுக்கும்
"பிச்சைக்காரி"
-3-
கூட்டணியுமில்லை..
சத்தமுமில்லை..
"ஒற்றை வளையல்"
-4-
இரசிப்பதை நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!
-5-
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"
-6-
பாட்டியின் ஆசைமுத்தம்
இனிக்கவில்லை பேரனுக்கு
"கன்னத்தில் வெற்றிலைக்கறை"
என் மனம்..,
என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!
உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!
-1-
களவு என்பதால்
காதலும் பாவமே!!
-2-
கோபத்தின் உச்சத்தில்
அவர்கள்..
"போய்விடு" என்றான்
அவன்..
"ம்..போகிறேன்" என்றாள்
அவள்..
"இருவருமே பொய்
சொல்லுகிறார்கள்" என்றது
காதல்..
-3-
காமம்
அவர்கள் வியர்த்திருந்தார்கள்
காதல் காற்று வாங்க சென்றது..
எனது புத்தகங்கள் எல்லாம்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது..
உனது பெயராலே!
எனது உளறல்களும்
எனது கிறுக்கல்களும்
உனது பெயராகிப் போனது!
உன்பெயரின் எழுத்துக்கள்
சொல்லியே.. பூக்கள் பறிக்கிறேன்!
உன் பெயரின் முதல் எழுத்தாய்
என் ஒற்றை முடி வளைக்கிறேன்!!
அது கலையாமலிருக்க..அதில்-என்
நெற்றி பொட்டை ஒட்டுகிறேன்.
உன் பெயர் எழுதியே
படிந்த தூசி விலக்குகிறேன்!
சிதறிய வார்த்தைகள் சேர்த்து
உன்பெயர் புனைகிறேன்!
இனிப்பை நேசிக்கும்
குழந்தையின் மனம்போல
எனது பேனாவும், மையும்
உனது பெயரை நேசிக்க ஆரம்பித்துவிட்டன!
ஆம்..,
நீயே...எழுதியிருக்கமாட்டாய்
இத்தனைமுறை உன்பெயரை!
உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!
உன் பெயர் எழுதும்போது..
கரைந்த மை,
மோட்சம் பெற்றது!!
சிதறிய மை,
அதிஷ்டம் இழந்தது!!
உனது பெயர் எழுதிக்
கரைந்த இறந்தகாலம்
உன் பெயரை உள்வாங்கி
உயிர் பெற்றது.
எனது பெயர் முழுமைபெற்றது
உனது பெயரோடு
தன்னைச் சேர்த்தபோது!
நான் இறந்தபின்
பிறந்த குழந்தை,
உன்பெயர் சொல்லி அழைக்கப்பட்டால்...
என் ஆன்மா திரும்பிப் பார்க்கும்!!
கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!
நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!
மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!
கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!
பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!
பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!
நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!
விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!
பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!
என் மனம் ஒரு
வெண் சங்கு!!
சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.
அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?
மழை..
-1-
அழைப்பின்றி வரும்
தீயணைப்புப்படை!!
-2-
காற்று மண்டலத்தின்
தூசு தட்டும்
ஈரத் துடைப்பான்!!
கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?
முகமலர்ச்சி..
மனமகிழ்ச்சியின்
நேரடி ஒளிபரப்பு!!
வேண்டும்..
ஆசைகளை உறங்க வைக்க
ஒரு தாலாட்டு!!
பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!
குழந்தைகள்..
ஒரே தேவனின்
பல பிரதிபலிப்பு!!
மரணம்..
வாழ்க்கை வைத்த
முற்றுப் புள்ளி!!
ஏழை..
பணத்தால்
கைவிடப்பட்டவன்!!
காளான்..
மழைக்குப் பின்
ஏன்னிந்தக் குடை?
கவிதை..
கருவைச் சுமக்கும்
தாய்மை!!
ஓவியம்..
தூரிகையின் பயணத்தால்
உருவான புண்ணியஸ்தலம்!!
போர்வை..
மூடிப் படுக்கும் போது
எனை மூழ்கடிக்கும்
சிந்தனைக் குடில்!!
மௌவல்..
மழலையின் சிரிப்பில்
அம்பலமான ரகசியம்!!
வண்ணத்துபூச்சி..
-1-
வண்ணங்களுக்கு என்று
சிறகு முளைத்தது?
-2-
நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!
-1-
இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!
-2-
உன் பாதம் நனைத்த
மழைத்துளியிடம் தோற்ற..,
குடையாகத்தான்
நான் உன்னிடம்!!
-3-
நிராகரித்தாய்...
நனைவதற்கு ஆசைப்பட்ட
குடைக்கம்பியானது
என் காதல்!!
தாமதமாய்..,
ஏற்றுக்கொள்கிறாய்...
குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்!!
-4-
குடையுடன்... காத்திருக்கிறது
ஒரு காதல்!!
மழைக்காக..
வந்து விட்டதோ
வெயில்..
பத்திரமாகவே காதல்
குடைக்கு நன்றி!!
-5-
ஒரு குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!
என்னை வாசித்து
பின் ..
எனக்கே என்னைக்
கற்றும் கொடுத்தாய்..
உன்னிடம் கற்று
கொண்ட..
"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை..
இமைப் பொழுதையும்
விணாக்குவதில்லை
உன்னை நினைக்காமல்....
~~~~o~0~*~0~o~~~~
பாதுகாத்துக் கொள்கிறேன்
பரிசாகத் தா... உன்
இமை முடியினை..
~~~~o~0~*~0~o~~~~
"இல்லை" என்று சொல்ல
நினைத்து...
"ஆம்"- என்றேன் நீ
நிமிர்ந்து பார்த்ததினால்!
~~~~o~0~*~0~o~~~~
பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...
~~~~o~0~*~0~o~~~~
பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...
வார்த்தைகளுக்குள்...
வாக்குவாதம்.,
உன்னைப் பற்றி எழுத
தன்னைப் பயன்படுத்த
வேண்டுமென்று!
மேகங்களில் அடைபட்டிருந்த
தேகமற்ற பிணைக்கைதிகளுக்கு..,
தென்றலின் பேச்சு வார்த்தையால்
இன்று விடுதலையோ?
நெரிசல்..
வியர்வை..
முகம் தெரியாதவர்களின்
ஸ்பரிசங்களின் சங்கடம்...
அடைத்த ஜன்னல்...
அதனூடே,
நான் பார்க்க...
உன் பெரிய கரங்களின்
சிறிய அசைப்பு.
அத்தனையும் மறந்தே போனது..
வந்துவிட்ட எனக்கான
நிறுத்தம் உட்பட!!!
பசியிலிருக்கும் தன் பிள்ளையை
நினைவிற்கொண்டு
பகலில் தன்னைப்
பரிமாறிகொண்டிருந்தாள்
அவள்...
"விலைமகள்"