யாரும் திட்டாதிங்க...இன்னுமா இதுன்னு.., கஷ்டப்படாதீங்க:)
தாமதமான பதிவுக்கு மன்னியுங்கள் கவிதை(கள்) !!
a-z எழுதவில்லை அதற்கும் சேர்த்து மன்னியுங்கள்...!
அன்பிற்குரியோர் "அன்பில்லாதவர்களும் கூட"
ஆதரவானது "மனிதம் மட்டுமே"
இயல்பானது "மாற்றங்கள்"
ஈட்ட வேண்டியவற்றுள் ஒன்று "பிறரின் நம்பிக்கை"
உண்மையான பொய் "நான் ரெம்ப நல்லவ"
ஊருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"
எப்போதும் வாயில் "பிடித்த பாடலின் வரிகள்"
ஏதாவது ஒருநாள் தான் "அம்மாட்ட திட்டே வாங்காமல் கழியும்"
ஐ.................... :)"உற்சாகப் பொழுதுகளில் தானாய் உளறலில் வந்துவிடும் ஓர் எழுத்து"
ஒவ்வொருவரிடமும் "ஒரு வியக்கத்தக்க விஷயம் இருக்கும்னு நான்
நம்புறேன்"
ஓதுதல் நன்று -அதனால, "எந்த குழந்தையின் அம்மாவிடம் பேசும்போதும் கண்டிப்பா படிக்க வைங்கன்னு சொல்லும் வழக்கம் உண்டு "
ஒளவை மொழி.. "ஆறுவது சினம்"
ஃ .... "நல்ல படம்"