Thursday, September 29, 2011

அந்தி -2-

பகலின்
சோம்பல் முறிப்பு.

இரவின்
குழந்தைப் பருவம்.

நாளின்
மூன்றாம் வணக்கம்.

தேநீருடன் விடியும்
மற்றொரு அதிகாலை.

அந்தி என்றுமே
ஆனந்தம்தான்!!

0

சூரியனுமில்லை,
நிலவுமில்லை..
ஒளிப்பந்தி வைக்கும்
அந்தி அதிசயம்தான்!!

Wednesday, September 21, 2011

ம்மா..

வலி

கண்ணீரில்லா
அலறல்கள்

பிறந்துவிட்டான்

இன்னும் மயக்கமுறவில்லை
நான்
தெளிவான குரலில்..

என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!

துணியில்
சுற்றிய பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்

இப்போதும்,
வலி

துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்

தெளிவான மயக்கம்
என்னுள்..!

Saturday, September 17, 2011

..??..

யாரோ செய்த பாவம்
கை கால் முளைத்து
ஆடையின்றி,
கண்ணாடி வழி
பார்த்திருந்தது..

ஆடையணிந்திருந்த
மெழுகு பொம்மையினை!!

Tuesday, September 13, 2011

..!!..

காதல்தான் பூமியின்
ஈர்ப்புவிசையோ...?
ஆப்பிள் வழி
அறியப்பட்டதால்..!!

Thursday, September 1, 2011

நிலாக்கள்..

-1-
தன்னைக் காட்டி
சோறூ
ட்டப்படும் குழந்தைகளை
வேடிக்கை பார்க்கிறது நிலா.

-2-
யுகயுகமாய் நீராடியும்
கறையுடன் சிரிக்கும்
மிதக்கும் நிலா!!

-3-
அழைக்க அழைக்க
செல்லாமல்,
பிழைத்தும் கிடக்கிறேனே??
என வேதனித்தது..
கறை அதிகமாவதை
உணர்ந்த நிலா.

ஏதோ ஒரு தெருவின்..,
எல்லா வாசல்களிலும்
ஏறி இறங்கியபடி
சென்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுமி,
நிலா நிலா ஓடி வா.. என்றழைத்தபடியே!!