joshua: அடு யாடு.
மீ: அது பிச்சைக்காரன்
joshua: அப்படின்னா?
மீ: அவுங்களுக்கு,வீடு இல்ல, சோறு இல்ல,அப்புறம்
joshua: அம்மா இல்லையா?? சோறு ஊட்ட மாட்டாங்களா?
...................................................
மீ: பாட்டு பாடவா?கத சொல்லவா?
joshua:கட
மீ: ஒரு காக்கா இருந்துச்சாம்,தண்ணிதாகமா இருந்துச்சாம்.ஆத்துலையும் தண்ணியில்லையாம்,குளத்துலையும் தண்ணியில்லையாம்,
joshua: அவுங்க வீட்டுல அம்மா இல்லையா? , டம்மர்ல ஊத்தி தரமாட்டாங்களா ?
.......................................................
மறுபடியும்,கதை.
மீ: குருவி கூட்டுல இருந்துச்சாம்,அப்போ ஒரு பெரிய மழை,குரங்கு நனஞ்சுட்டே வந்து மரத்துல இருந்துச்சாம்.அப்போ குருவி,கேட்டுச்சாம் உனக்கு கை இருக்கு,கால் இருக்கு வீடுகட்டிக்கலாம்லன்னு குரங்குட்ட சொல்லுச்சாம்.குரங்குக்கு கோவமாகிடுச்சாம்,உன்னையும் உன் கூட்டையும் பிச்சு போடவான்னு கேட்டுச்சாம்.
joshua: கொடங்க அவுங்க அம்மா அடிச்சு வீடு கட்ட சொல்லியே கொடுக்கலையா?
................................
ஒவ்வொரு வார்த்தைக்கும் ம்ம் கொட்டிக் கதை கேக்குறான்,கேள்வி கேக்குறான்,எல்லாம் அம்மா சம்பந்தமாவே இருக்கும்.3yrs 9months ஹ்ம்ம்.