Thursday, December 8, 2011

அந்தி - 3 -

மரிக்கும் பகலுக்கும்
உயிர்க்கும் இரவுக்கும்
இடையே
துக்கம் சந்தோசம் - எனும்
சலனங்களற்ற மௌனம்
அந்தி.

Tuesday, November 29, 2011

செரலாக் பொழுதுகள்..

ம்மா..
மியாவ்..
பெள பெள ...
கா கா..
கியா கியா..

எல்லாமுமாகவும்
மாற வேண்டியிருக்கிறது
அம்மாவாகிய நான்
ஒருவேளை உணவூட்ட

0

செரலாக் நரைமீசையுடன்
கம்பீரமாய்த்
தவழுகிறான்

0

ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு பிளேவர்
எல்லாவற்றிலும் அம்மா வாசனை

0

புறா பாரு
காரு பாரு
மலை பாரு
மரம் பாரு
குருவி பாரு

வாயிலிருந்ததை
விழுங்கிவிட்டான் போல,

அள்ளிக் கொடுக்கும் கரண்டியையே
பார்த்திருந்தான் அவன்

0

நிலா
வட்டமா?
சதுரமா?

குழப்புகிறது..

பாற்சோறு கிண்ணம்

Thursday, November 24, 2011

..!!..

அதிகாலையின் ஒவ்வொரு கோலத்திலும்
அழகாய் விழித்திருக்கிறது
யாரோ ஒருவரின் உறக்கம்.

Sunday, November 13, 2011

..!!..

எவையுமே
அல்லது
யாருமே
உன்னை நினைவுபடுத்தியதாய்..
நினைவில்லை.

நீ..,
உன்னில் மட்டுமே
இருக்கிறாய்.

Sunday, October 30, 2011

..!!..

பிறைகூன் வெளித்
தொட்டிலினுள்,
பிள்ளை நிலா.

Wednesday, October 19, 2011

..!!..

வரவேற்பறையின் இருக்கைகளில்
பிடித்த ஒவ்வொருவரையாய்
அமர்த்திப் பார்க்கிறது
என் தனிமை.

Monday, October 10, 2011

..!!..

தினம் தினம்
ஒரு செய்தியை
வாசலில் வைத்துப்போகிறது
காலம்

எனக்கான
இன்றைய செய்தி

ஒற்றை இறகு!!