-1-
"பயன்படுத்துங்கள் என்னை"
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது..,
குப்பைத் தொட்டியில்
குழந்தை..!!
-2-
"விளம்பரம் செய்யாதீர்கள்"- என
விளம்பரம் செய்திருந்தார்கள்..!!
-3-
"இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்"
என்பதற்கு பதிலாக..,
சுவற்றின் வெளிப்புறத்தில்
பதிக்கப்பட்டார்களோ,கடவுளார்கள்..??
-4-
"எச்சில் துப்பாதீர்"
வெற்றிலைக்கறைகளுக்கிடையே..!!