Thursday, October 29, 2009

வாசகங்கள்...

-1-
"பயன்படுத்துங்கள் என்னை"
தவறாகப்
புரிந்துகொள்ளப்பட்டது..,
குப்பைத் தொட்டியில்
குழந்தை..!!

-2-
"விளம்பரம்
செய்யாதீர்கள்"- என
விளம்பரம் செய்திருந்தார்கள்..!!

-3-
"இங்கே
சிறுநீர் கழிக்காதீர்கள்"
என்பதற்கு பதிலாக..,
சுவற்றின் வெளிப்புறத்தில்
பதிக்கப்பட்டார்களோ,கடவுளார்கள்..??

-4-
"எச்சில் துப்பாதீர்"
வெற்றிலைக்கறைகளுக்கிடையே..!!

Saturday, October 24, 2009

...!!...

தன் வெளியில் தானாய்ச்
சிந்திய ஒளியின் துளிகள்..,
என் வீட்டின் முன்அறையிலும்.

தவிர்த்து.. தாழிட்டு..
உள்அறையில் உறங்கச் சென்றேன்.

கனவில் நிலா..!!

Wednesday, October 21, 2009

கவிதை முத்தங்கள்...

ஒரு முத்தம்
சாவு.

மறு முத்தம்
பிறப்பு.

ஜென்மங்கள் பல
கொடுக்கிறாய்..,
பிரம்மனோ நீ..!

Thursday, October 15, 2009

..!!..

நீ... என்றொரு
ஒற்றை ராகம் மட்டுமே
இசைக்கும்...,
என் உயிர்ப்புல்லாங்குழல்..!!

Monday, October 12, 2009

...?...

தொலைவில் தன் அலகுகளால்
தொட்டுக்கொண்டிருந்தன
ஒரு ஜோடிப் புறாக்கள்...
பொறாமை கொண்டாள்,
அவள் முதிர்கன்னி..!!

Friday, October 9, 2009

கவிதை முத்தங்கள்..

நாம் எங்கு துவங்கினாலும்
முடிந்து போவதென்னவோ..,
முத்தங்களில்தான்..!

நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!

Saturday, October 3, 2009

உன் நினைவுகள்-5-

உன் நினைவுக்குமிழியினுள்
அடைபட்டிருக்கும் காற்றுதான்
உனக்கான என் சுவாசம்...

Thursday, October 1, 2009

கவிதை முத்தங்கள்..

முதல் முத்தம்
கொள்ளி..

உயிருள்ளவரை நான்..,
நடமாடும் சிதை!!