-1-
தன்னைக் காட்டி
சோறூட்டப்படும் குழந்தைகளை
வேடிக்கை பார்க்கிறது நிலா.
-2-
யுகயுகமாய் நீராடியும்
கறையுடன் சிரிக்கும்
மிதக்கும் நிலா!!
-3-
அழைக்க அழைக்க
செல்லாமல்,
பிழைத்தும் கிடக்கிறேனே??
என வேதனித்தது..
கறை அதிகமாவதை
உணர்ந்த நிலா.
ஏதோ ஒரு தெருவின்..,
எல்லா வாசல்களிலும்
ஏறி இறங்கியபடி
சென்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுமி,
நிலா நிலா ஓடி வா.. என்றழைத்தபடியே!!