Friday, August 26, 2011

..!!..

பார்த்துக்கொண்டேயிருந்த
பாட்டிம்மாக்கு
ஒரு பொட்டலம்.

மற்றொன்றில்
பகிர்ந்தோம்..

இன்னும் தீரவேயில்லை
இருந்துகொண்டேயிருக்கிறோம்
நீயும் நானும்!!

Saturday, August 20, 2011

இது கவிதையல்ல...

இது மழைக்கவிதை
என்றேன்...

குடையுடன் வாசிக்க
வந்த சிலர்.
லயித்து குடைவிரிக்க
மறந்து நனைந்தனர்..

தெறிக்கும் துளிகளிலிருந்து
தம்மை ஒதுக்கிக்கொண்டனர் சிலர்...
விரித்த குடைக்குள்

சிலர் கிடைக்காத
நிலா நட்சத்திரம் தேடினர்..

இடி..
மின்னல்..
குளிர்காற்று..
வானவில்..
என தேடல்கள் கூடியிருக்க,

முதலாவதாய் எழும்
மண்வாசனை நுகர
யாராவது வாய்த்தால
மழை என்னுள்!!

Wednesday, August 17, 2011

..!!..

சுவாசிக்கும் ஆசை வந்தவுடன்
இறந்துவிட்டது
நீர்க்குமிழி!!