Thursday, April 29, 2010

..!!..

இருளின் சந்துகளில்
முனுமுனுக்கும் ஊர்க்கிழவிகள்
விண்மீன்கள் - அதை
இமைக்காமல் செவிமடுத்த
முழுநிலா..குளிரொளிப் புகையாய்
பூமியிடம் கக்குகிறது கதைகளை!

உணரக் கிடைத்தவர்களுக்கு
ஒவ்வொரு கதைகள்..!

எனக்கோ..,
அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!

Thursday, April 15, 2010

நிலா,நட்சத்திரங்கள்,இரவு.

-1-
என்டோமெட்ரியமோ
நீ?
மாதம் ஒருமுறை
உதிர்ந்து விடுகின்றாய்...!

-2-
நிலவரும்புகளா
நீங்கள்?

-3-
கிழிந்த இரவுப் போர்வை
வழியே..,பகல் எட்டிப் பார்க்கிறது
நிலவு ஓட்டையில்..
விண்மீன்கள் பொட்டரிப்பில்..!!

0

-1-
வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்!

Wednesday, April 7, 2010

ஒவ்வொரு மனதிடமும்...

Happy world health day to all........!!
முன்குறிப்பு:வேலை பார்க்கும் போது, என்னோட ஒரு மாணவிக்கு மன நிலை சரியில்லாமல் போனபோது..,(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்)
அவளுடன் psychiatric hospital - லில் ஒரு இரவும், இரு பகல்களும்.., தங்க வேண்டியிருந்தது.அப்போ,இரவெல்லாம் பிற நோயாளிகளின் உளறல்களும் என் மாணவியின் நடவடிக்கைகளும் என் உறக்கத்தைப்றித்தன...,பின்வரும் வரிகளைக் கொடுத்தன..!


மரிக்கும் முன்
சிரி!

மனம் பிழைக்க
அழு!

பிழையானாலும்
பேசு!

கேள்விகள்
கேளு!

பதில்கள்
தேடு!

உன் செயல்
யோசி!

வாழ்க்கையை
அழை!

தீயதை
மற!

குற்றம்
களை!

உரியதை
எடு!

மீதியைக்
கொடு!

கபடம்
விடு!

எண்ணம்
தெளி!

கிடைத்தவை
வாசி!

நல்லவை
காண்!

தீயவையும்
அறி!

விழு பின்
எழு!

கட்டளை
(கைக்)கொள்!

தோல்வியில்
கல்!

வண்ணத்துப் பூச்சியாய்
நிறம் கொள்!

வானவில்லாய்
வளை!

தும்பி போல்
தேன் காண்!

கொள்கை
கொள்!

உன் கருத்தை
சொல்!

வன்மை
உடை!

மென்மை
பேண்!

உள்ளம்
திற!

உணர்வுகள்
பிரி!

எல்லாம்
நேசி!

ஆபத்திலாவது
விழி!

செய்திகள்
சுவை!

கீதம்
இசை!

பிறர் இதயம்
அசை!

பறவையாய்
பற!

பூக்கள்
பார்!

நிலவையும்
நினை!

குழந்தைகள்
ரசி!

பசித்தாலும்
ருசி!

ருசிக்காவிட்டாலும்
புசி!

உழைத்தே
தேய்!

உண்மைக்குள்
தோய்!

உறவுகள்
இணை!

நம்பிக்கை
வளர்!

நிகழ்வுகள்
பகிர்!

இயற்கையோடு
புணர்!

மனிதம்
உணர்!

இன்னும் ஆயிரம்....

பின்.,
உன் உருவமில்லா மனம்
நோயாகாது..!
நிச்சயமாய்
பூரணமாகும்..!!

மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!

உள்ளத்தால்
உலகம் காண்..!

மனிதனாகவேவாவது
மரி....!!

Friday, April 2, 2010

..!!..

உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்..!

என்னுள்
என் காதல்..!!