Monday, September 7, 2009

உன் நினைவுகள்-4-

அழுத்தும் உன்நினைவுகளை
இறக்கிவைக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது..,
எனக்கு மீண்டும்
உயிர்த்தெழத் தெரியாதென்பது!!

10 comments:

S.A. நவாஸுதீன் said...

ஆசையை மறக்க ஆசை அது போலத்தான்.
கவிதை அழகு இரசிகை

Ashok D said...

இப்படி படிக்கும்போதுதான்
தெரிகிறது.. குட்டிக் கவிதைகளில்
நீங்கள் கெட்டிக்காரர் என்பது!!

நிலாரசிகன் said...

//நினைவிற்கு வருகிறது..,//

நினைவுக்கு வருகிறது என்றிருந்தால் வாசிக்கும்போது இன்னும் சுவையாக இருக்கும் என்பது என் எண்ணம்.

நல்ல கவிதை இரசிகை. வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

! ! !

அடேயப்பா ரசிகை எப்வ்வளவு மாற்றம் அதுவும் குறுகிய காலத்தில்
மிக்க மகிழ்ச்சி ..!

கவிக்கிழவன் said...

உங்கள் கவிதைகள் கவரப்படும்

சந்தான சங்கர் said...

ஆழமான விசயங்களில் மூழ்கும்போது
அதில் இருந்து மீளமுடிவதில்லை
ஏனென்றால்,
மூழ்கும்போது மீளவேண்டும் என்ற
எண்ணம் இருப்பதில்லை...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு ரசிகை.நல்லா இருக்கீங்களா ரசிகை?

இரசிகை said...

m.......

mikka nalam:)

துபாய் ராஜா said...

தொடரட்டும் நினைவுக் கவிதைகள்.

thiyaa said...

யதார்த்தமான கவிதை
உங்கள் நினைவுகள் தொடர வாழ்த்துகிறேன்

Post a Comment