Saturday, May 15, 2010

எண்ணப்பறவை உதிர்த்த இறகுகள்..

-1-
பிடித்த வசனம்
தொடங்கயிருக்கும் வினாடிகளில்..
ஆரம்பித்தது விளம்பர இடைவேளை !!

-2-
நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!

-3-
குளித்துவிட்டு சிறகுலர்த்துகின்றன
சிட்டுக்கள்..
குடிப்பதற்கென வைக்கப்பட்ட
அகன்றவாய் பாத்திரத்தின்
விளிம்பில் நின்று !!

-4-
அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!

-5-
இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!

-6-
"லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !!

39 comments:

நேசமித்ரன் said...

ஆஹா!

ரசிகையா இது!

சான்ஸே இல்லைங்க

அற்புதம் வேறென்ன சொல்ல 6,5,3,2

டைம் இல்ல இப்போ வந்து பேசறேன் டீச்சரம்மா
:)

ஹேமா said...

கடைசி மனதில் லயித்தது தோழி !

பா.ராஜாராம் said...

beutiful ரசிகை!

எல்லா கவிதைகளும் பிடிச்சிருக்கு.

உங்க கவிதை சார்ட்ல கிராப் போட்டா, ஒரே ஏறுமுகம் தான் பாஸ்! :-)

keep going..

(நேசன்தான் லிங்க் தந்தார். பிடிச்ச கவிதைகளை மட்டுமே உடன் லிங்க் அனுப்புவார்.நன்றி நேசா!)

Raghu said...

//பிடித்த வசனம்
தொடங்கயிருக்கும் வினாடிகளில்..
ஆரம்பித்தது விளம்பர இடைவேளை !!//

இவிய்ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான்!

//குளித்துவிட்டு சிறகுலர்த்துகின்றன
சிட்டுக்கள்..
குடிப்பதற்கென வைக்கப்பட்ட
அகன்றவாய் பாத்திரத்தின்
விளிம்பில் நின்று !!//

ந‌ல்லாருக்குங்க‌ :)

Raghu said...

ஒரு வேண்டுகோள், word verificationஐ எடுத்து விட்டுடுங்க‌. க‌மெண்ட் போடுற‌துக்கு சுல‌ப‌மாயிருக்கும்

ny said...

number five is fabulous!!

u hit a six with ur sixth!!

ஆயில்யன் said...

//நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!//

ரசிப்பு தன்மை அழகு!

//லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !! //

ரயில் ரோடு?!

ஹம்ம்ம் நான் இன்னும் தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய்ய்ய்ய்ய்ய்ய் இருக்கு :(

இரசிகை said...

//
நேசமித்ரன் said...
ஆஹா!

ரசிகையா இது!

சான்ஸே இல்லைங்க

அற்புதம் வேறென்ன சொல்ல 6,5,3,2

டைம் இல்ல இப்போ வந்து பேசறேன் டீச்சரம்மா
:)
//

kadantha sila idukaikalukku 1st - a comment koduththutte irukkeenga:)
athuvum yellaame urchchaagap paduththum comments..!
santhoshamaayirukku.
m..vanthu pesunga.

//
ஹேமா said...
கடைசி மனதில் லயித்தது தோழி !
//

muthal varukaikkum vaasippukkum nantri:)

//
பா.ராஜாராம் said...
beutiful ரசிகை!

எல்லா கவிதைகளும் பிடிச்சிருக்கு.

உங்க கவிதை சார்ட்ல கிராப் போட்டா, ஒரே ஏறுமுகம் தான் பாஸ்! :-)

keep going..

(நேசன்தான் லிங்க் தந்தார். பிடிச்ச கவிதைகளை மட்டுமே உடன் லிங்க் அனுப்புவார்.நன்றி நேசா!)
//

vaanga rajaram sir:)
vaazhthukkalukku nantriyum anbum..!
naanum nantri sollikkuren mithran sir - kku:)

//
ர‌கு said...
//பிடித்த வசனம்
தொடங்கயிருக்கும் வினாடிகளில்..
ஆரம்பித்தது விளம்பர இடைவேளை !!//

இவிய்ங்க‌ எப்ப‌வுமே இப்ப‌டித்தான்!

//குளித்துவிட்டு சிறகுலர்த்துகின்றன
சிட்டுக்கள்..
குடிப்பதற்கென வைக்கப்பட்ட
அகன்றவாய் பாத்திரத்தின்
விளிம்பில் நின்று !!//

ந‌ல்லாருக்குங்க‌ :)

ர‌கு said...
ஒரு வேண்டுகோள், word verificationஐ எடுத்து விட்டுடுங்க‌. க‌மெண்ட் போடுற‌துக்கு சுல‌ப‌மாயிருக்கும்
//

word verification - i yeduththuttennu ninaikkiren...[remba konjoondithaan comp knowledge yenakku]
varukaikkum vaazhthukkum nantri!

//
kartin said...
number five is fabulous!!

u hit a six with ur sixth!!
//

vaanga sir....:)
nantriyum anbum!

//
ஆயில்யன் said...
//நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!//

ரசிப்பு தன்மை அழகு!

//லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !! //

ரயில் ரோடு?!

ஹம்ம்ம் நான் இன்னும் தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய்ய்ய்ய்ய்ய்ய் இருக்கு :(
//

nantri.........nga!
kaththukka vendiyathu niraiyaaththaan irukkunga mazhalaikalidamirunthu:)

பா.ராஜாராம் said...

//u hit a six with ur sixth!! //

karthin's brand! :-)

க ரா said...

அருமை. அருமை. அருமை.

சுந்தர்ஜி said...

அத்தனையும் அற்புதம்.ஒவ்வொரு சின்னத் திருப்பங்களோடு-ஆச்சர்யப்படவைக்கும் உவமைகளோடு.சபாஷ். அடிக்கடி சந்தோஷப்படுத்துங்கள் ரசிகை.

r.v.saravanan said...

இரண்டாவது மூன்றாவது மிக ரசித்தேன் தோழி

word verification
எடுத்து விட்டேன் என் ப்ளாக் இல்
kudanthaiyur.blogspot.com

Nathanjagk said...

சிக்கனமா சி​தைச்சுட்டீங்க :)) வாழ்த்துக்கள் இரசிகை!

//அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!//

​என்ற கவி​தை மட்டும் ப​ழைய ஆண்தனம் நிரம்பிய கவி​தையாக இருக்கிறது. இ​தை ​பெண்​மொழியில் எழுதினால் எப்படியிருக்கும்?

Nathanjagk said...

//இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!
//
இந்த கவி​தை​யை ​நெஞ்சில் ​போட்டுக் ​கொள்கி​றேன் குழந்​தை அல்லது வாழ்த்தட்​டை ​போல!!

Ashok D said...

//கடைசி மனதில் லயித்தது தோழி !//
எனக்கும்..!
ராஜா சந்திரசேகர் சாயலை போன்று உணர்ந்தேன் குறுங்கவிதைகளில் :)

கனிமொழி said...

Nice...... :-)

Madumitha said...

5,+6 செமக் கலக்கல்

சீமான்கனி said...

உங்கள் எண்ணப்பறவை உதிர்த்த இறகுகள் இதயம் வறுடுகிறது...கற்று கவர்ந்து விடாமல் இருக்க பொத்திவைக்கிறேன் இதய கூட்டுக்குள்...

சத்ரியன் said...

ரசிகை,

அடிக்கரும்பு ருசி அதிகம்..!

இரசிகை said...

//
பா.ராஜாராம் said...
//u hit a six with ur sixth!! //

karthin's brand! :-)
//

m......rajaram sir:)
naanum antha varikalai silaakiththen!
irunthaalum solla vendiyavarkal sonnaalthaan arumai:)

sir.....neenga sunderji - in valaip pakkam poi paarungalen.appadiye mithran sir kum sollungalen.yenakkup pidiththathu.ungalukkum pidikkum:)

//
இராமசாமி கண்ணண் said...
அருமை. அருமை. அருமை.
//

nantri...nantri..nantri.....:)

//
சுந்தர்ஜி said...
அத்தனையும் அற்புதம்.ஒவ்வொரு சின்னத் திருப்பங்களோடு-ஆச்சர்யப்படவைக்கும் உவமைகளோடு.சபாஷ். அடிக்கடி சந்தோஷப்படுத்துங்கள் ரசிகை.
//

nantri....sundarJI..:)
ungal kavithaikalai..rajaram sir mithran sir-laam vaasikkanumngirathu en aasai:)

//
r.v.saravanan said...
இரண்டாவது மூன்றாவது மிக ரசித்தேன் தோழி

word verification
எடுத்து விட்டேன் என் ப்ளாக் இல்[nallathu]
kudanthaiyur.blogspot.com
//

nantringa........:)

//
ஜெகநாதன் said...
சிக்கனமா சி​தைச்சுட்டீங்க :)) வாழ்த்துக்கள் இரசிகை!

//அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!//

​என்ற கவி​தை மட்டும் ப​ழைய ஆண்தனம் நிரம்பிய கவி​தையாக இருக்கிறது. இ​தை ​பெண்​மொழியில் எழுதினால் எப்படியிருக்கும்?
//

m......yeppadiyirukkum??
neengale sollungalen:)
[nijamaave yenakkuth theriyala]

//
ஜெகநாதன் said...
//இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!
//
இந்த கவி​தை​யை ​நெஞ்சில் ​போட்டுக் ​கொள்கி​றேன் குழந்​தை அல்லது வாழ்த்தட்​டை ​போல!!
//

m...pottuk kondathaiththaan paarththene:)
meendum nantri!

//
D.R.Ashok said...
//கடைசி மனதில் லயித்தது தோழி !//
எனக்கும்..!
ராஜா சந்திரசேகர் சாயலை போன்று உணர்ந்தேன் குறுங்கவிதைகளில் :)
//

nantringa....!
perusaa unarnthirukkeenga:)

//
கனிமொழி said...
Nice...... :-)
//

nantri......:)

//
Madumitha said...
5,+6 செமக் கலக்கல்
//

nantringa....:)

//
seemangani said...
உங்கள் எண்ணப்பறவை உதிர்த்த இறகுகள் இதயம் வறுடுகிறது...கற்று கவர்ந்து விடாமல் இருக்க பொத்திவைக்கிறேன் இதய கூட்டுக்குள்...
//

nantringa.....:)

//
’மனவிழி’சத்ரியன் said...
ரசிகை,

அடிக்கரும்பு ருசி அதிகம்..!
//

nantringa......!

Aathira mullai said...

//அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!//
நடப்புக்கு மொழி கொடுத்துள்ளீர்கள்.. எல்லா துளிப்பாக்களும் அருமை..

Aathira mullai said...

//அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!//

Cable சங்கர் said...

nice sixer

பிரவின்ஸ்கா said...

//லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது//

நல்லாருக்கு

சுந்தர்ஜி said...

நன்றி ரசிகை.ஏதையும் எதிர்பாராது முகம் நனைக்கும் மழைத் துளி போல உங்கள் சிபாரிசு என்னை நெகிழ்ச்சிக்கு ஆட்படுத்தியது.எல்லாம் தானாய் நகரும் என்று நம்புபவன் நான்-காற்றில் நகரும் இலை போல.உங்கள் அன்புக்கு நான் கடனாளி.

இரசிகை said...

nantri..aathira,cable sankar,and pravinska:)

sundarji..
ungalin kavithaikalin tharame yennai sibaarisu seiya vaiththathu.yellaam thaanaai nagarum unmaithaan.ippo naan sonnathum kooda iyalpaai nadanthathuthaane:)
nalla kavithaikal.,avarkalum rusikkattume - nu thonuchchu.avvalave!!
kadanaali laam illai ok vaa??..:)

Nathanjagk said...

//neengale sollungalen:)//
பெண்சிந்தனையில் இதை அமைப்பது ​பெண்களால்தான் சுலபமாக முடியும்...
என்னால் இயன்ற வரையில் இவ்வளவுதான் வந்தது:

கர்ப்பத்தடை மாத்திரைப் பட்டை
இன்னும் தீரவில்லை
தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டுகிறான்.

இரசிகை said...

//
ஜெகநாதன் said...
//neengale sollungalen:)//
பெண்சிந்தனையில் இதை அமைப்பது ​பெண்களால்தான் சுலபமாக முடியும்...
என்னால் இயன்ற வரையில் இவ்வளவுதான் வந்தது:

கர்ப்பத்தடை மாத்திரைப் பட்டை
இன்னும் தீரவில்லை
தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டுகிறான்.
//

:)

nallaayirukku!

சுந்தர்ஜி said...

நீங்கள் சொன்னால் சரி. தவிர நீங்கள் விரும்பியபடி என் வலைப்பூவைப் பின் தொடரும் வசதி தற்காலிகமாக இல்லை. கிடைத்தவுடன் தருகிறேன்.

பா.ராஜாராம் said...

ஒரு சிறுகதை.

வாசித்து பாருங்க மக்கா.

http://saravanakumarpages.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்த்ம்ல்

மதுரை சரவணன் said...

//அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!//

கவிதை அனைத்தும் அற்புதம்.

நந்தாகுமாரன் said...

5 மட்டும் பரவாயில்லை ... மற்றதெல்லாம் மஹாகொடுமைங்க ...

மெல்லினமே மெல்லினமே said...

super a irukku rasigai!

பத்மா said...

நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!

இது என்னை போல இருக்கு ரசிகை ..அதனால் ரொம்ப பிடிச்சுருக்கு

Jey said...

பெரும்பலான கவிதைகள் எனக்கு புரிவதில்லை, ஒருசிலது புரிந்த மாதிரியிருக்கும். எனது 3 வயது மகளுடன் அதிக நேரம் செலவிடுவதால் , உங்களின்

//"லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !!///

கவிதை எனக்கு புரிந்து விட்டது. ஹா ஹா ஹா.
நன்றி.

சென்ஷி said...

//
"லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !! //

அருமை!

அன்பேசிவம் said...

சென்ஷியின் இந்த வரிகளை பிடித்து வந்தேன், அனைத்தும் அருமை என்றாலும் குறுங்கவிதை அபாரம். வாழ்த்துக்கள் ரசிகை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குழந்தையின் மழலையே ஒரு கவிதை தான்! சூப்பர் எல்லாமுமே!

TamilTechToday said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

More info visit Here www.elabharathi2020.wordpress.com

Post a Comment