Tuesday, May 28, 2013

நானும் மகனும்..

என்னுடைய மகன் raymond.இரண்டரை வயது.
நிறைய பேசுறான்.கேட்டுட்டே இருக்கலாம்.

மதியம் அவனை தூங்க வச்சிட்டு சில வேலைகள் செய்யனும்னு எனக்கு plan.
பேசிட்டே இருந்தான்...கையில் விசில் வச்சு ஊதிட்டும்  இருந்தான்.முதல்ல விசிலை வாங்கினால்தான் தூங்கவைக்க முடியும்னு பேசிட்டே,வேகமா பிடுங்கி side-ல வச்சுட்டு காக்கா தூக்கிட்டு போயுடுச்சுன்னு சொன்னேன்.
எதுக்கும்மா எப்பவுமே காக்காதான் தூக்கிட்டு போகுது?கொக்கு குருவிலாம் தூக்கிட்டு போகாதான்னு கேட்டான்.கொஞ்சநேரத்தில் தூங்கிட்டான்.evening எழுந்து அங்கேயே கிடந்த விசிலை எடுத்துட்டு  தூக்கக் கலக்கதோடே..
எப்போ காக்கா வந்து விசிலை போட்டுசுன்னு வேற கேள்வி.

:)


நைட் தோசை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்.தெருவுல விளையாண்டுகிட்டேதான் சாபிடுவான்.அங்கும் இங்குமா நடந்துட்டே கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கணும்.அன்றைக்கு அவனை ஏமாத்தி கொடுக்கத் தெரியாமல் முழிச்சுட்டு இருந்தேன்.மூணு குட்டி உருண்டையாய் தட்டில் வைத்து இது அம்மா வாய்,இது அப்பா வாய்,இது raymond வாய் ன்னு நான் சொல்லிக்கொண்டே பிடித்து வைப்பதை சிரிச்சுட்டே பார்த்துட்டு இருந்தான்.இதுவரைக்கும் அப்படி சொல்லி ஊட்டினதே இல்ல.அவனுக்கு புதுசா இருந்தது அவன் கண்களில் தெரிந்தது.ok..,கொடுத்துடலாம்னு நம்பிக்கை வந்துச்சு.maymond  வாய் maymond -க்கு ,அம்மா வாய் அம்மாக்கு,அப்பா வாய் அப்பாக்கு ன்னு சொல்லீட்டு sir   ஒரு உருண்டை தவிர வேற சாப்பிடவேயில்ல.நானும் கட்டாயப்படுத்தல.


இப்படி அவன் நிறைய பேசுறான்...
அழகாயிருக்கு.

4 comments:

r.v.saravanan said...

குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் அழகு தான் ஒரு கவிதை தான்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நீங்கள் நிறையக் கவிதை எழுதுவீர்கள் என்று சபிக்கிறேன்.

ரேமண்ட் அம்மாவுக்காய்க் கவிதைகளைக் கொட்டட்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்.

நேசமித்ரன். said...

ஹை நல்லாருக்கு :)

இரசிகை said...

r.v.saravanan sundarji and mithran sir
yellaarukkum nantriyum anbum.
:)

Post a Comment