Monday, July 9, 2018

:((

அன்பின் ராஜாராம் அவர்களுக்கு 

ராஜன் தன்னோட ட்வீட்ஸ்ல உங்க கவிதைகள் போஸ்ட் பண்ணினதை பார்த்துட்டு உங்க நியாபகம் வந்துச்சு.உங்க blog போய் எனக்கு பிடிச்ச போஸ்ட் எல்லாம் நிதானமா வாசிச்சுட்டு வந்தேன்.அப்போல்லாம் நீங்க இறந்துட்ட செய்தி எனக்குத் தெரியாது.
சந்தோசமா வாசிச்ச கடைசி முறை அதுவாத்தான் இனி இருக்கும்.

உங்களை நன்றியோடு நினச்சு பார்க்க எனக்கும் சில தருணங்கள் உண்டு.
எனக்கு உங்க முகமே தெரியாது.குரல் மறந்துடுச்சு எழுத்துதான் மிகநன்றாய் தெரியும்.அதின் வழி அன்பும்.அதுதான் இப்போது அழ வைத்து என்னை எழுத வைத்தும் கொண்டிருக்கிறது.

ஆன்மா இளைப்பாற வேண்டுதல்கள் 

1 comment:

Admin said...

நாம் பதிவுலகை விட்டே ஓடிவிட்டோம் நீங்கள் இன்றும் தொடர்வதில் மகிழ்ச்சி

Post a Comment