Wednesday, August 17, 2011

..!!..

சுவாசிக்கும் ஆசை வந்தவுடன்
இறந்துவிட்டது
நீர்க்குமிழி!!

11 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நீண்ட நாட்களுக்கு பின்

அருமை அருமை ...

rajasundararajan said...

இக் கவிதை ஹைக்கூவுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஹைக்கூ ஓர் இலக்கணப் பா வகை. ஒரு வெண்பா எழுது என்றால் நம்மில் யாரும், இரண்டடி, மூன்றடி, நான்கடி என்று அடிஎல்லையை மட்டும் எடுத்துக்கொண்டு வெண்பா எழுதியதாகக் காட்ட முடியாது. தளை தட்டாமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

அடிஎல்லையை எடுத்துக்கொண்டு மூன்றடிகளில் கவிதை எழுதிவிட்டால், அதுதான் ஹைக்கூ என்று நம்மவர்களில் பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் (இதே கோளாறு மேற்கத்தியர்களிடமும் உண்டு). ஹைக்கூவில் முக்கியமானது: ஒன்று x அதற்கு முரண் -> விளைவு. Thesis x Antithesis -> Synthesis என்பது போல. புத்த ஞானத்துக்கு இசைவானது இது.

ரசிகையின் இக் கவிதை 'சுவாசம் x இறப்பு -> நீர்க்குமிழி' என்று ஹைக்கூ இலக்கணத்துக்கு ஏற்பக் கச்சிதமாக இயல்கிறது. மேலும், பிறந்து சுவாசிக்கத் தொடங்குகிற முதன் மூச்சில்தான் உயிர்வாழ்தலே தொடங்குகிறது; சாக்காடு நோக்கிய நம் நகர்தலின் கணக்கும்.

வாழ்க!

துபாய் ராஜா said...

..!!.. = :)

r.v.saravanan said...

ஒரு சில வரிகளே என்றாலும் அருமையாய் உள்ளது கவிதை
நீண்ட நாளுக்கப்புறம் பதிவு நல்வரவு தொடர்ந்து எழுதுங்கள்

rajamelaiyur said...

சிறிய அனால் அழகிய கவிதை

rajamelaiyur said...

நல்ல கவிதை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?

இரசிகை said...

//
நட்புடன் ஜமால்
துபாய் ராஜா
r.v.saravanan
"என் ராஜபாட்டை"- ராஜா
//

anaivarukkum nantri...with santhoshamum!!

//
rajasundararajan,

yenakku iyavin pinnootam paarthavudane remba santhosham.
unga pinnootathai matha blog-la yellaam aannu paathurukken.yenakkunnu paarkkum pothu muthalla nambave mudiyala..:)
m..
nantriyum anbum.....!
//

rajasundararajan said...

எப்போதும் நன்றாகவே எழுதி வருகிறீர்கள். முந்தியே ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன். அச் சமையத்தை ஒட்டி நீங்கள் எழுதுவதைத் தள்ளிவைத்துவிட்டீர்கள், அவ்வளவுதான்.

நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் கோரிக்கை.

இரசிகை said...

//
rajasundararajan

kandippaanga, iya.....

nantri!
//

கா.ந.கல்யாணசுந்தரம் said...

இரசிகை உங்களின் ஹைக்கூ கவிதைகள்
இதயங்களைக் கொள்ளை கொள்கிறது.
இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

கா.ந.கல்யாணசுந்தரம்
www.kavithaivaasal.com
www.haikukavithaigal.com
www.thesmileofhumanity.com

Post a Comment