Friday, August 17, 2012

நீ பற்றியவைகள்..

0
கரியாமல் எரியும்  நான் 
நீ பற்றியதில்.

0
மிக மிகத் 
தனிமையாய் அழுகிறேன் 
ஈரமானாயா நீ?

0
எழுதிக் கொண்டேயிருக்கிறேன் 
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!

0
கவிதைகள் உதிர்க்காமல் 
கடந்து  போகவே தெரியாத 
நீ பற்றி அறிவாயா நீ??

0
மொத்த மழையின் 
தெப்ப ஈரம் தரும் 
ஒற்றை துளியினாள் நீ.

0
உதிர்ந்த பூக்களையெல்லாம் 
கிளையேற்றி பார்க்கும் 
கவிதைமனம் கொடுத்ததென்னவோ 
நீ மட்டும் தான்.

0
கோர்ப்பதும் 
உதிர்ப்பதுமாய்
இருந்தன விழிகள்.
சிதறின 
சில நீ - க்கள்.

0
நீ யின்றி அமையாது உலகு 
கவிதையான பிழை.

5 comments:

An...Bu said...

Nalla irukku yellam

நேசமித்ரன் said...

நீ யின்றி அமையாது உலகு
கவிதையான பிழை.//

:)

இரசிகை said...

nantri anbu..
nantri mithran sir..
:)

லெமூரியன்... said...

\\கரியாமல் எரியும் நான்
நீ பற்றியதில்//

Ithu super. :-)

\\எழுதிக் கொண்டேயிருக்கிறேன்
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!//

உங்க ரத்தத்தோட கலந்திருப்பனோ அந்த நண்பன்..!

காதல் ரசம் சொட்டுதே இந்த வரிகள்ள..!
:-)

இரசிகை said...

vaanga lemuriyan..
nantri.

Post a Comment