Monday, November 24, 2014

நீ சார்ந்தவைகள்

-0-
உனக்கு வாழ்த்தனுப்பித் துவங்கும் போது 
உண்மையாகவே துவங்குகிறது
அந்த நிமிடம்
நாள்
வருடம் 

-0-
துளியும் இனி
நீ வேணாம் 
போதுமெனக்கு என்றொரு முடிவில்
இப்படியாக எழுதித்
தோற்றேன்  

நீ போதும் எனக்கு.

-0-
எப்போதாவது நேரிடவே செய்கிறது
மனம் தேடும் நிழல்
உன் சாளரத்தில் கிடைக்கும் நிஜம்.

-0-
என்னை முழுவதாய் உள்வாங்கிக் கொள்ளும்
நீளப் போர்வை
உன்னை நினைவுபடுத்தாத
வெது வெதுப்பைக் கொடுத்தால்
நலமாகும் இந்த இரவு.

-0-
கனவுகள் பெருஞ்சுமை
நீ என் கனவானதென்ன

-0-
குளிர் நீரோடையடி நீ.
சலசலக்கிறாய் 

4 comments:

லெமூரியன்... said...

நீர் திவலைகள் தெறிச்ச மாதிரி
அழகா இருக்கு...

கார்க்கிபவா said...

//எப்போதாவது நேரிடவே செய்கிறது
மனம் தேடும் நிழல்
உன் சாளரத்தில் கிடைக்கும் நிஜம்.//

இப்படித்தான் ஒவ்வொருவருக்குமான ஆறுதலை மறைத்து வைத்து ஆச்சரியமாய் ஒரு நாள் கொடுக்கிறது வாழ்க்கை..good one

இரசிகை said...

thanx karki

இரசிகை said...

thanx lemurion

Post a Comment