விரல்களை நதிகளாக்கி 
உள்ளங்கையை கடல் என்றாள் 
மேடுகளில் மலைகள் வரைந்து 
குழிந்த உள்ளங்கையை குளம் என்றாள் 
விரல்கள் சேர்த்து வளைத்து 
நீள் சமவெளி என்றாள் 
விரல்கள் மட்டும்  
வரப்பு மேடுகள் என்றாள் 
நேற்று காதலென்றாள் 
இன்று எதுவுமில்லை என்றாள் 
வெறுமையாய் இருக்கிறது 
எதுவுமாய் இல்லாத உள்ளங்கைகள்
2 comments:
அருமை.
வாழ்த்துக்கள்.
nantri :)
Post a Comment