Wednesday, September 21, 2011

ம்மா..

வலி

கண்ணீரில்லா
அலறல்கள்

பிறந்துவிட்டான்

இன்னும் மயக்கமுறவில்லை
நான்
தெளிவான குரலில்..

என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!

துணியில்
சுற்றிய பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்

இப்போதும்,
வலி

துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்

தெளிவான மயக்கம்
என்னுள்..!

6 comments:

Anonymous said...

கவிதை ரொம்ப அருமை.

-சே.குமார்

rajasundararajan said...

அருமை!

தன்னை ஈன்றபோது தன் தாய் என்ன பாடுபட்டிருப்பாள் என்னும் வலியறிதல்!

"'அவரை'க் கூப்பிடுறீங்களா?" என்னும் பொருத்தமில்லாத பொய்மரபை வெளிறடித்தல்!

//பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்

இப்போதும்,
வலி

துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்

தெளிவான மயக்கம்//

'பேரனுடன்' என்று தொடங்கி அடுத்தடுத்து நோவுணரும் இந்த அடிகளுக்காகவும், கவிஞரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

தக்குடு said...

:-))

ரிஷபன் said...

என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!

கவிதை சந்தோஷமாய் வலிக்கிறது.

இரசிகை said...

vaasithu vaazhthiya ullangalukku anbum nantriyum..:)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒரு தாயை உணரவைக்கும் கவிதை. அபாரம்.

Post a Comment