Wednesday, August 26, 2009

உன்னிடம்....

-1-
என்னிடம்..கூட இல்லை
உன்னிடம் மட்டும்தான்
நான் இப்படி!

-2-
எனக்கான ரகசியங்கள்..
உன்னிடம் இருக்கும்
என் நினைவுகள்!

-3-
உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்..
உன்னிடம் கூடப்
பேச மறக்கிறேன் நான்!

-4-
உனக்கே..உன்னிடம்
இல்லாத உரிமை
எனக்குண்டு!

-5-
உன்னிடமிருந்து
விலகும் முயற்சியின்..முடிவில்,
உன்னைத்தான் வந்தடைகிறேன்!

14 comments:

ஒளியவன் said...

1, 5 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. :)

நட்புடன் ஜமால் said...

உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்..
உன்னிடம் கூடப்
பேச மறக்கிறேன் நான்!]]

அருமை நிலை.

Ashok D said...

Last one.. highlights.

துபாய் ராஜா said...

அனைத்தும் அருமை.

//உனக்கே..உன்னிடம்
இல்லாத உரிமை
எனக்குண்டு!//

அனைத்திலும் அருமை.

S.A. நவாஸுதீன் said...

உன்னிடமிருந்து
விலகும் முயற்சியின்..முடிவில்,
உன்னைத்தான் வந்தடைகிறேன்!

கிளாஸ்.

நேசமித்ரன் said...

ரசிகை கவிதையில் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள்

Information said...

மிகவும் அருமை

அரங்கப்பெருமாள் said...

-2-
ஸ்நேகிதனே..ரகசிய ஸ்நேகிதனே..
இன்னிக்கித்தான் அர்த்தம் புரியுது.
-3-
உலகம் உருண்டை, அதான் அப்பிடி ஆவுது..

அனைத்தும் அருமை.

ஒளியவன் said...

இங்கே வந்து பாருங்கள்.
http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/08/blog-post_28.html

துபாய் ராஜா said...

அன்பு சகோதரி,

உங்களுக்கு ஒரு விருது. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_28.html

உங்கள் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த விருது.

எனது அன்பிற்காக இந்த பல்சுவை பதிவர் விருதை வாங்கி கொள்ளுங்கள். (நீங்கள் ஏற்கனவே வாங்கி இருந்தாலும் )

நன்றி.வணக்கம்.

அன்பன்

துபாய் ராஜா

விக்னேஷ்வரி said...

ரொம்ப அழகாருக்கு, அனுபவிச்சு எழுதின மாதிரி.

இரசிகை said...

viruthu kodukka vantha 2 perukkum...

vaasithu suvaiththa pira vaasakarkalukkum
nantri:)

Suresh K said...

Congrats Akka to you too :-)!

பா.ராஜாராம் said...

ஒன்றும்,மூன்றும் அஞ்சும்.நல்லாருக்கு ரசிகை.விருதுக்கு வாழ்த்துக்கள்!நன்றி துபாய் ராஜா.ரசிகை நம் வீட்டு மனுஷி என்பதால் இந்த நன்றி..

Post a Comment