Saturday, May 16, 2009

நீ மட்டும்..!

நகன்று கொண்டேயிருக்கும்
நதி அவர்கள்.
என் குவளைக்கான நீராய்...
நீ மட்டும்!

தொடரும் நீளமான
நிலம் அவர்கள்.
எனக்கான பூர்வீகத்தின்
ஆறடி நிலமாய்...
நீ மட்டும்!

பூமியை நிறைக்கும்
பூங்காற்று அவர்கள்.
என் உயிர் கட்டும்
சுவாசமாய் ...
நீ மட்டும்!

தொலைவாய் விரிந்த
வானம் அவர்கள்.
என் வீட்டின்
தென்னங்கீற்றின் பின்
ஒளிந்து எனைப் பார்க்கும்
ஒரு வரி வானமாய்...
நீ மட்டும்!

பற்றி எரியும்
தழல் அவர்கள்.
என் படுக்கை அறையின்
மெழுகின் சுடராய்...
நீ மட்டும்!

1 comment:

ஒளியவன் said...

ஒன்றைப் பிடித்ததால் மற்றொன்றைப் பிடிக்காமல் போன மாயையா அல்லது அது ஒன்று தான் பிடித்துப் போனதா?!

ஏதோ ஒன்று, ஆக மொத்தம் ஒன்றாவது நிலைத்திருப்பது நலம்.

Post a Comment