Thursday, May 14, 2009

எப்பொழுது..?

எனக்குப் பிடித்தவைகள்
எல்லாம் கொடுக்கிறாய்...
"உன்னை எப்பொழுது?"

நீ நேசித்தவைகள்
எல்லாம் கேட்கிறாய்...
"என்னை எப்பொழுது?"

எனக் கேட்டவளும்...
கொடுத்தவனும்...
தங்களுக்குள் புழுங்க..,

தனித்து விடப்பட்டிருந்தது
காதல்!

2 comments:

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க!!!
அன்புடன் அருணா

ஒளியவன் said...

காதலுக்குத்தான் இருவரும் அடைக்கலம் கொடுத்திருக்கின்றனரே! பாவம் அந்த அடைக்கலப் பட்ட காதல் அத்துமீறத்தான் முடியவில்லை போலும்.

கவிதை நச்!

Post a Comment