Sunday, May 17, 2009

இவை கவிதைகள் அல்ல Confusions..

இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!

ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை

உனக்குத் தெரியாது
ஆனால் - நான் உனக்கு
அடிமை!

என்னாலியன்ற அளவு
உன்னை நினைத்துவிட்டேன்.
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை

உன் வார்த்தைகளின்
எதிரொலி, இன்னும்
எனக்குள்..

உனக்குத் தெரியாமலேயே
உன்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும்
நான்..,"எனக்குப் புதிது"

2 comments:

saranece@gmail.com said...

என்னாலியன்ற அளவு
உன்னை நினைத்துவிட்டேன்.
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை

saranece@gmail.com said...

romba nalla irukku unga confusion

Post a Comment