Sunday, May 17, 2009

இல்லாமை இனிமையாகிறது!

மழையில்
குடையில்லை..

பௌர்ணமியன்று
வீட்டிற்குள் அனுமதியில்லை..

மெழுகும் அதன் ஒளியும்
மின்சாரமில்லை..

படபடக்கும் பட்டாம்பூச்சி
பூவில் தேனில்லை..

நின்றால் மட்டுமே தெரியும் குழந்தை
பயணத்தில் உட்கார இடமில்லை..

கவிஞனின் பசிக்கு
உணவில்லை..

இமைக்காத பார்வை
நமக்குள் மொழியில்லை..

உன் நினைவுகளோடு நான்
என்னோடு நீயில்லை..

ஆம்!
"இல்லாமை
இனிமையாகிறது "

2 comments:

J S Gnanasekar said...

Super

ISR Selvakumar said...

வித்தியாசமான சிந்தனை.

நிறைய எழுதுங்கள். எழுத்து ஒரு வரம். அது உங்களுக்கு வாய்த்திருக்கின்றது.

Post a Comment